உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலுார் : முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் செய்திக்குறிப்பு:தமிழக முதல்வர் சுதந்திர தின விழாவில், பொதுமக்களுக்கு குறைந்தவிலையில் மருந்துகள் கிடைக்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக 1000 மருந்தகங்கள்துவங்கப்படும் என அறிவித்தார்.முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள பி.பார்ம்., - டி.பார்ம்., சான்றுபெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம்வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மருந்தகம் அமைக்க 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடமாக இருக்கவேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்துவரி ரசீது அல்லது குடிநீர் வரி ரசீதுஅல்லது மின்இணைப்பு ரசீது, வாடகை இடம் எனில் இடத்திற்கான உரிமையாளரிடம் இடம் ஒப்பந்த பத்திரம்பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியமாக 3 லட்சம் ரூபாய் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும். டேப்செட்கோ, தாட்கோ மற்றும் டாம்கோ பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை 1.50 லட்சம் ரூபாய் விடுவிக்கப்படும்.தேர்வு செய்யப்படுபவர்கள் உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள்,குளிர்சாதன பெட்டி, 'ஏசி' மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிக்கட்ட மானியம் 1.50 லட்சம் ரூபாய்க்கு மருந்துகளாக வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ