லட்சுமி சோரடியா பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கி, சென்னை கிங்ஸ் அகாடமி நடத்திய வேதிக் கணிதம் தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற 51 மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதேபோல் பள்ளி வேதிக் கணித ஆசிரியர்கள் மாதவி, இளவரசி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பத்தா கான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.