உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தம் அருகே துணிகரம்

மூதாட்டியிடம் செயின் பறிப்பு ராமநத்தம் அருகே துணிகரம்

ராமநத்தம் : ராமநத்தம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி, காட்டுக்கொட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி அம்மணி, 60; நேற்று காலை 9:30 மணியளவில் தனது வீட்டிலிருந்து அதே பகுதியிலுள்ள ஏரிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிக்காக நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே மோட்டார் பைக்கில் பின்னால் வந்த மர்ம நபர், அம்மணி கழுத்தில் அணிந்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை சவரன் செயினை பறித்து தப்பிச் சென்றார். ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !