உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெருமாள் கோவிலில் புண்ணிய கால பூஜை

பெருமாள் கோவிலில் புண்ணிய கால பூஜை

திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், விஷ்ணு புண்ணிய கால சிறப்பு பூஜை நடந்தது. திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், பசுவுக்கு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, பிரகாரத்தில் உள்ள கொடி மரத்திற்கு விஷ்ணு புண்ணியகால சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ் சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை