உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில்களில்  ஆயுத பூஜை  வழிபாடு

கோவில்களில்  ஆயுத பூஜை  வழிபாடு

விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. வேடப்பர் கோவில், ஏகநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.மேலும், வாகனங்களுக்கு மாலை அணிவித்து, எலுமிச்சை பழத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ