மேலும் செய்திகள்
குடிநீர் பைப் தகராறு தம்பதி மீது வழக்கு
22-Jul-2025
நடுவீரப்பட்டு: நிலத்திற்கு பாதை அமைக்கும் பணியால் ஏற்பட்ட தகராறில் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். நடுவீரப்பட்டு அடுத்த எஸ்.புதுக்குப்பத்தை சேர்ந்தவர் கனகராஜ்,37; சிலம்பிநாதன்பேட்டை மேற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்,50; இருவருக்கும் எஸ்.புதுக்குப்பத்தில் நிலம் உள்ளது. மணிகண்டன் தமது நிலத்திற்கு செல்ல சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த சாலையை கனகராஜ் சேதப்படுத்தியதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இருதரப்பும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், மணிகண்டன், பிரபாகரன் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Jul-2025