உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு 

மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு 

கடலுார் : மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். எம்.புதுார் அருகே மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். விசாரணையில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இது தொடர்பாகஎம்.புதுார் காசிநாதன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ