உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி: வாலிபரை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் புஷ்பகுமார், 24; இவர் நேற்று முன்தினம் வயலை உழுது முடித்து டிராக்டரில் வீடு திரும்பினார். அப்போது முன்விரோதம் காரணமாக அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் உள்ளிட்ட, 4 பேர் அவரை கீழே தள்ளி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த புஷ்பகுமார் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் சாமிதுரை, சிலம்பரசன், கோகுல், தினேஷ் ஆகியோர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை