உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தந்தையை தாக்கிய மகன்கள் மீது வழக்கு

தந்தையை தாக்கிய மகன்கள் மீது வழக்கு

வடலுார்: தந்தையை உருட்டு கட்டையால் தாக்கிய மகன்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்வடலுார், ஆபத்தாரணபுரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் தனவேல்,42; கேரளாவில் கூலி வேலைக்கு சென்று நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரது மகன்கள் தனுசு, தரணி ஆகியோர் புதிதாக வீடு கட்டி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தனவேல் கேட்டபோது அவரை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் காயமடைந்த தனவேல் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், தனுசு, தரணி ஆகியோர் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி