உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி: பெண்ணை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்குறிஞ்சிப்பாடி, அ.முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி தனலட்சுமி, 37. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜவேல். இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம், தனலட்சுமி வீட்டிற்கு சென்ற ராஜவேல் அவரை ஆபாசமாக திட்டி, தாக்கி உள்ளார். இதனை தடுக்க சென்ற தனலட்சுமி மகனையும் ராஜவேல் தாக்கினார். இதையடுத்து காயமடைந்த தனலட்சுமி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் ராஜவேல் மீது, குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை