செல்லியம்மன் கோவிலில் தேர் திருவிழா
சேத்தியாத்தோப்பு,; பரதுார் செல்லியம்மன் கோவிலில் 60ம் ஆண்டு தேர்த் திருவிழா நடந்தது. சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரதுார் தெற்கு கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏழாம் நாளான நேற்று முன்தினம் தேர்த் திருவிழா நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.