உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துாய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம்

துாய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார்: கடலுாரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் துாய்மையே சேவை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். தாசில்தார் பலராமன், பி.டி.ஓ., க் கள் வீரமணி, பார்த்திபன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி முன்னிலை வகித்தனர். இதையடுத்து, பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து துவங்கி, கடலுார்-நெல்லிக் குப்பம் சாலை வழியாக சாவடி வரை சென்று வந் தது. இதில் ஊராட்சி செயலாளர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்று, துாய் மையே சேவை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !