மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம் 695 மனுக்கள் குவிந்தன
06-May-2025
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 620 மனுக்கள் பெற்றார். கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
06-May-2025