உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிரைம் செய்திகள் கடலுார்

கிரைம் செய்திகள் கடலுார்

சிகிச்சை பலனின்றி வாலிபர் சாவு

பெண்ணாடம்: விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுாரைச் சேர்ந்தவர் மகாராஜன் மகன் ராஜேஷ்குமார், 30; .சர்வர். கடந்த 28ம் தேதி அரியலுார் மாவட்டம், தளவாய் கிராமத்தில் நண்பரை பார்க்க பைக்கில் சென்று விட்டு மீண்டும் விருத்தாசலம் திரும்பிக் கொண்டிருந்தார். பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் அருகில் வந்த போது, எதிரில் வந்த மொபட், பைக் மீது மோதியது. இதில், காயமடைந்த இருவரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ராஜேஷ்குமார் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மண்வெட்டியால் தாக்கியவர் கைது

குறிஞ்சிப்பாடி: வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது சகோதரர் சக்கரவர்த்தி. இருவருக்கும் இடையே வயலுக்கு செல்வதற்கான பாதை தகராறு உள்ளது. கடந்த 28ம் தேதி ராமலிங்கம் நிலத்தில் டிராக்டரில் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை, 43; உழவு ஓட்டி முடித்து திரும்பினார். இவரை, வழிமறித்த சக்கரவர்த்தி, ஆபாசமாக திட்டி, மண்வெட்டியால் தலையில் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து சக்கரவர்த்தியை கைது செய்தனர்.

குட்கா விற்றவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, தொரவளூர் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பதுக்கி விற்றதை கண்டுபிடித்து உரிமையாளர் ராஜா, 42, என்பவரை கைது செய்தனர்.

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு

விருத்தாசலம்: ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு தலைமையிலான போலீசார், ரோந்து சென்றனர். குருவன்குப்பம் ஓடைப்பகுதியில் மணல் கடத்த முயன்ற இருவரை மடக்கிப் பிடிக்க முயன்ற போது, தப்பினர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்குப் பதிந்து குருவன்குப்பம் பரசுராமன் மகன் முருகவேல், ஆலடி கனகசபை மகன் தங்கவேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மோதலில் 8 பேர் மீது வழக்கு

விருத்தாசலம்: கம்மாபுரம் அன்பழகன், இளையபெருமாள் இருவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்தது. கடந்த 28ம் தேதி கம்மாபுரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வந்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஒருவரை ஒருவர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆபாசமாக திட்டி, தாக்கிக் கொண்டனர். இருதரப்பு புகார்களின் பேரில், இயைபெருமாள், அன்பழகன் உட்பட 8 பேர் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வாலிபர் மீது தாக்குதல்

விருத்தாசலம்: பெரியகண்டியங்குப்பத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் கார்த்திக், 27. கடந்த 27ம் தேதி சின்னகண்டியங்குப்பத்தில் வயல்வழியாக சென்றபோது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சிலர், அவரை வழிமறித்து, பீர் பாட்டிலால் முகத்தில் குத்தினர். அதில், பலத்த காயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது தாய் சுதர்செல்வி புகாரின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ