உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலி அடையாள அட்டை தயாரித்த கடலுார் மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

போலி அடையாள அட்டை தயாரித்த கடலுார் மாநகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்

கடலுார் : கடலுார் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை ஸ்கேன் செய்து போலி அடையாள அட்டை தயாரித்த ஒப்பந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். சென்னை பெரம்பூர் சுப்ரமணியர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் 50; இவர் கடலுார் மஞ்சக்குப்பம் செந்தாமரைநகரில் தங்கி, கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் கடலுார் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலைபார்க்கும் பிரபுதேவா என்பவர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை ஸ்கேன் செய்து போலியாக அடையாள அட்டை தயார் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்று புகார் செய்திருந்தார். இது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம், கையெழுத்தை போலியாக ஸ்கேன் செய்து அடையாள அட்டை தயாரித்த பிரவுதேவாவை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை