மேலும் செய்திகள்
வடலுார் தைப்பூச விழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்
11-Feb-2025
கடலுார்: விடுதி லிப்ட் பழுதாகியதால், கடலுார் காங்., -- எம்.பி., உள்ளிட்ட 6 பேர் உள்ளுக்குள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலுார் மாவட்டம், வடலுார் தனியார் விடுதி மூன்றாவது மாடியில், காங்., கட்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் பங்கேற்றார்.மதியம், 1:00 மணியளவில், விடுதி மூன்றாம் தளத்திற்கு செல்ல, விஷ்ணுபிரசாத், கடலுார் மாவட்ட தலைவர் திலகர் உள்ளிட்ட கட்சியினர் ஆறு பேர் லிப்டில் ஏறினர். லிப்ட் பாதியில் பழுதாகி நின்றது.வடலுார் போலீசார், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்கள் கடப்பாரையால் லிப்ட் கதவை உடைத்து, எம்.பி., உள்ளிட்ட ஆறு பேரை மீட்டனர். அப்போது, முன்னாள் இளைஞர் காங்., தலைவர் ஷாக்கோ, வடலுார் நகர தலைவர் பலராமன் மயக்கமடைந்தனர்.அங்கு வந்த வடலுார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் இருவருக்கும் முதலுதவி அளித்தனர். ஐந்து பேர் செல்ல வேண்டிய லிப்டில் ஆறு பேர் ஏறியதால் பழுதானதாக கூறப்படுகிறது.
11-Feb-2025