உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஸ்டம்ஸ் சாலையில் பாலம் உள் வாங்கியதால் மாற்றுப்பாதை

கஸ்டம்ஸ் சாலையில் பாலம் உள் வாங்கியதால் மாற்றுப்பாதை

கடலுார்: கடலுார் கஸ்டம்ஸ் சாலையில் பாலம் உள்வாங்கியதால், வாகன போக்குவரத்திற்காக தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடலுாரில் இருந்து பகண்டை வரை உள்ள கஸ்டம்ஸ் சாலை வழியாக பண்ருட்டி மற்றும் விழுப்புரத்திற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பெண்ணையாற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதனால், விஸ்வநாதபுரம், வெள்ளப்பாக்கம் உட்பட பல இடங்களில் ஆற்றின் கரையை தாண்டி தண்ணீர் கஸ்டம்ஸ் சாலையில் புகுந்தது. அந்த இடங்களில் சாலையில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் சென்றதால், கஸ்டம்ஸ் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.மருதாடு கஸ்டம்ஸ் சாலையில் உள்ள பாலம் திடீரென உள்வாங்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆனாலும், உள்வாங்கிய பாலத்தில் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், இப்பாலத்திற்கு அருகில், தற்காலிக மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை