| ADDED : ஆக 21, 2026 07:32 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள நீர்வழி புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது. விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் உள்ள நீர்வழி பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டியுள்ளதாக, தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நீர்வழிபாதையில் உள்ள 11 கட்டடங்களை இடித்து அகற்ற உத்தரவிட்டது. அதன்பேரில், நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், நான்கு கட்டடங்களை முதல் கட்டமாக இடித்து அகற்றினர். இந்நிலையில், நகராட்சி கமிஷனர் நாகராஜ் தலைமையில், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 7 கட்டடங்களை இடித்து அகற்றும் பணி நேற்று துவங்கியது. நகமைப்பு அலுவலர் கோகுலகிருஷ்ணன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது.