உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ரயிலில் அடிப்பட்டு இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அடுத்த திருவதிகை அருகே உள்ள ரயில் பாதையை நேற்று மாலை 6:00 மணிக்கு 60 வயது முதியவர் கடக்க முயன்றார். அப்போது, திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் சிக்கி உடல் நசுங்கி இறந்தார். தகவலறிந்த கடலுார் ரயில்வே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புருேஷாத்தம்மன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ