உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை விபத்தில் முதியவர் பலி

சாலை விபத்தில் முதியவர் பலி

பெண்ணாடம் : சாலை விபத்தில் முதியவர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியைச் சேர்ந்தவர் இளவரசன், 62; இவர் நேற்று காலை தனது மொபட்டில் விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் பெண்ணாடம் சென்று கொண்டிருந்தார். அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது, அதே பகுதியை சேர்ந்த அஞ்சலை என்பவர் தனது பசு மாட்டை சாலையின் குறுக்கே ஓட்டிச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக பசு மாட்டின் மீது மொபட் மோதியதில் இளவரசன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை