மேலும் செய்திகள்
இறந்தவர் யார் போலீஸ் விசாரணை
09-Oct-2025
கடலுார்;அடையாளம் தெரியாத முதியவர் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் கமலம் தியேட்டர் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Oct-2025