உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

திட்டக்குடி; திட்டக்குடி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.திட்டக்குடி அடுத்த செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 50. இவரது வீட்டிற்கு வேப்பூர் அடுத்த ரெட்டாக்குறிச்சியைச் சேர்ந்த மாயக்கண்ணன், 40, என்பவர் நேற்று மாலை 6:30 மணியளவில் பழைய மின் ஒயர்களை மாற்றி, புதிய ஒயர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, மாயக்கண்ணன் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி