உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையில் நின்றிருந்தவரிடம் மிரட்டி பணம் பறிப்பு

சாலையில் நின்றிருந்தவரிடம் மிரட்டி பணம் பறிப்பு

கடலுார்: சாலையில் நின்று கொண்டிருந்தவரின் பாக்கெட்டிலிருந்து பணத்தை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர், தானம் நகரைச் சேர்ந்தவர் தனுசு, 47; இவர் நேற்று முன்தினம் இரவு சாவடியிலுள்ள அக்கா வீட்டிற்கு பைக்கில் சென்றார். கே.என்.பேட்டை பை பாஸ் சர்வீஸ் சாலையில் சென்ற போது, அங்கு சிறிது நேரம் நின்று போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்மநபர்கள் இரண்டு பேர், தனுசை மிரட்டி பணம் கேட்டனர். அவர் பணம் தர மறுத்ததால், அவரது பாக்கெட்டிலிருந்த செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது தனுசின் சட்டை பாக்கெட்டிலிருந்த 13ஆயிரத்து 500 ரூபாய் கீழே விழுந்தது. அதை மர்மநபர்கள் எடுத்துக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்றனர். தனுசு கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து இரண்டு மர்மநபர்க ளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி