உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணவாள மாமுனிகள் கோவிலில் உற்சவம்

மணவாள மாமுனிகள் கோவிலில் உற்சவம்

கடலுார்: திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் 655ம் ஆண்டு அவதார உற்சவம் நடந்து வருகிறது. கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் 655ம் ஆண்டு ஐப்பசி மாத திருமூல அவதார உற்சவம் கடந்த 18ம் தேதி துவங்கியது. அன்று திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமுறை நடந்தது. தொடர்ந்து, எம்பெருமானார் ஜீயர் சுவாமி, தேகளீச ராமானுஜாசாரியார் உபன்யாசம் நிகழ்த்தினார். நேற்று வெங்கடேஷ் சுவாமி உபன்யாசம் நிகழ்த்தினார். வரும் 27ம் தேதி வரை நடக்கும் உற்சவத்தில் தினமும் காலை 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா, 11:00 மணிக்கு திருமஞ்சனம், கண்ணாடி அறைக்கு எழுந்தருளி திருப்பாவை சாற்றுமுறை, மாலை 4:00 மணிக்கு உபன்யாசம், 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 7:00 மணிக்கு வீதியுலா, 9:00 மணிக்கு திருவாய்மொழி சாற்றுமுறை நடக்கிறது. இன்று (21ம் தேதி) அத்தங்கி சீனிவாசாச்சாரியார், நாளை 22ம் தேதி ஸ்ரீநிதி சுவாமி, 23ம் தேதி கிருஷ்ணன் சுவாமி, 24ம் தேதி ரங்கநாதன் சுவாமி, 25ம் தேதி தேவராஜன் சுவாமி, 26ம் தேதி கிடாம்பி நாராயணன் சுவாமி உபன்யாசம் நிகழ்த்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ