மேலும் செய்திகள்
கிருஷ்ணசாமி கல்லுாரியில் ரத்த தான முகாம்
04-Aug-2025
கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் நடப்பு கல்வி ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடந்தது. தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயகுமார், முதல்வர் இளங்கோ முன்னிலை வகித்தனர். உளவியல் வாழ்க்கைத்திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் கார்த்திக் வேலு, சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பொறியியல் துறையில் உள்ள முக்கியத்துவங்கள், வாழ்க்கையில் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி விளக்கினார். துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், துறைத் தலைவர் சிவராமன் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவக்குமார், மஞ்சுளா செய்திருந்தனர்.
04-Aug-2025