மேலும் செய்திகள்
மாணவன் மாயம் போலீசில் புகார்
27-Dec-2024
கடலுார்: கடலுார் அருகே காணாமல்போன மீனவர், லாரி விபத்தில் இறந்தது தெரியவந்தது.கடலுார் அடுத்த முதுநகர் சலங்கைகார தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 60; மீனவர். இவர், கடந்த 18ம் தேதி மதியம் டீ குடித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றவரை காணவில்லை. இதுகுறித்து அவரது மனைவி கற்பகம் கொடுத்த புகாரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் 21ம் தேதி இரவு, கடலுார் முதுநகர் தனியார் மருத்துவமனை அருகே ராஜேந்திரன் நடந்து சென்றபோது லாரி மோதியதில் இறந்தது தெரியவந்தது.விபத்து குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Dec-2024