உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், முதல்கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. 8:50 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். இரவு அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி