உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேவி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் 

தேவி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் 

சேத்தியாத்தோப்பு: மழவராயநல்லுாரில் சீதளா தேவி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த மழவராயநல்லுார் சீதளா தேவி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவஜனம், பஞ்சகவ்யம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை ரக்ஷாபந்தனம், வேதிகா அர்ச்சனை, தீபாராதனை யாகசாலை பூஜை, தத்துவார்ச்சனை, கோபூஜை, கஜ பூஜை, லஷ்மி பூஜை, கன்னிகாபூஜை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி