உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் கவிழ்ந்து 7 பேர் காயம்

அரசு பஸ் கவிழ்ந்து 7 பேர் காயம்

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில், 7 பேர் படுகாயமடைந்தனர்.பண்ருட்டியில் இருந்து நேற்று மாலை தடம் எண்.6 அரசு பஸ் குள்ளஞ்சாவடிக்கு பயணிகளுடன் சென்றது. பஸ்சை டிரைவர் குமார், 47; ஓட்டினார். பஸ் புலியூர்காட்டுசாகை - திரட்டிக்குப்பம் இடையே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வயல்வெளியில் கவிழ்ந்தது.இதில், டிரைவர் குமார், கண்டக்டர் சிவபெருமாள், 54; மற்றும் பயணிகள் 5 பேர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை