மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டத்தில் 573 மனுக்கள் குவிந்தன
07-Jan-2025
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.நில எடுப்பு டி.ஆர்.ஓ., சிவருத்ரய்யா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 554 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, கலெக்டர் நேர்முக உதவியாளர் ரவி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ரமா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Jan-2025