உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவியை தாக்கிய கணவன் கைது த.வா.க., பிரமுகர் உட்பட 4 பேருக்கு வலை

மனைவியை தாக்கிய கணவன் கைது த.வா.க., பிரமுகர் உட்பட 4 பேருக்கு வலை

கடலுார்: மனைவியை தாக்கிய கணவன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். த.வா.க., பிரமுகர் உள்ளிட்ட நான்கு பேரை கடலுார் போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் அடுத்த வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் விஷ்னுகேது 30; இவரது மனைவி காட்டுக்கூடலுாரைச் சேர்ந்த திவ்யபாரதி 27; இவர்களுக்கு 8 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. விஷ்னுகேது அண்ணன் ஆனந்த் 50; இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பொறுப்பில் உள்ளார்.கணவர் விஷ்னுகேது மனைவி திவ்யபாரதியை அடிப்பது, திட்டுவது என கொடுமைப்படுத்தினார். இதனை திவ்யபாரதி தட்டிக்கேட்டதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கடந்த 15ம் தேதி திவ்யபாரதி தந்தை விஷ்னுகேது வீட்டிற்கு பொங்கல் வரிசை வைக்க வந்தார். அப்போது அங்கு இருந்த விஷ்னுகேது மற்றும் அண்ணன் ஆனந்த், தம்பி சவுந்திரராஜன், பெற்றோர் சுப்ரமணியன், விஜயலட்சுமி ஆகியோர் சேர்ந்து திட்டி, பொங்கல் பொருள்களை தெருவில் வீசி எரிந்தனர்.இதனை திவ்யபாரதி தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த கணவர் விஷ்னுகேது மற்றும் இவரது குடும்பத்தினர் தாக்கி வீட்டில் இருந்து வெளியில் தள்ளி கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இதில் திவ்யபாரதிக்கு படுகாயம் ஏற்பட்டது.இது குறித்து திவ்யபாரதி கொடுத்த புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, த.வா.க மாநில நிர்வாகி ஆனந்த் உள்ளிட்ட இவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, கணவன் விஷ்னுகேதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். த.வா.க., நிர்வாகி ஆனந்த், தம்பி சவுந்திரராஜன், தந்தை சுப்ரமணியன், தாய் விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ