உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நுகர்வோர் குறை கேட்பு கூட்டத்தில் உடனடி தீர்வு

நுகர்வோர் குறை கேட்பு கூட்டத்தில் உடனடி தீர்வு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோர் குறை கேட்பு கூட்டம் மேற்பார்வையாளர் சதாசிவம் தலைமையில் நடந்தது.இதில் 50 க்கும் மேற்பட்ட நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறினர். இதில் 10க்கும் மேற்பட்ட நுகர்வோர் மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு மனு அளித்தனர். அவர்களுக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து சான்றிதழை மேற்பார்வையாளர் சதாசிவம் வழங்கினார். செயற்பொறியாளர் வள்ளி, உதவி செயற் பொறி யாளர்கள் சசிகுமார், பழனிவேலு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மற்ற மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை