ஜவகர் மெட்ரிக் பள்ளிக்கு குறுவட்ட போட்டியில் பரிசு
சிதம்பரம் : பி.முட்லுார் ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர். சிதம்பரம் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. அதில் பி.முட்லுார் ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கையுந்து பந்து, சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பள்ளி துணை முதல்வர் தசரதன் வரவேற்றார். பள்ளி நிறுவனர் கோவி மதியழகன் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை தலைவர் கோவி கல்விராயர், மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோ, இயக்குனர் நவீன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். வாகன மேலாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் கலைவாணன் நன்றி கூறினார்.