உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

கருமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

கடலுார்; கடலுார், புதுப்பாளையம் மாட்டுப்பட்டித் தெரு கருமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 19ம் தேதி காலை 10:00 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், கோ பூஜையும், மாலை 6:30 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கடம் புறப்பாடாகி 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கும்பாபிேஷகம் நடந்தது. கடலுார் சரக மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் பிரகாஷ், மருந்து மொத்த விற்பனை தொழிலாளர்கள் சங்க தலைவர் ரவி, செயலாளர் சுதாகர் மற்றும் உறுப்பினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். பூஜைகளை பெருமாள் செய்திருந்தார். இன்று மாலை 4:00 மணிக்கு மண்டல அபிேஷகம் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி