கல்வித்துறையில் சாதனை படைக்கும் கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்கள்
கல்வி, ஒழுக்கம், உயர்வு என்பதை தாரக மந்திரமாக கொண்டு, கடலுார் மாவட்டத்தின் கல்விக் கோவிலாக கிருஷ்ணசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் தலைவராக டாக்டர் ராஜேந்திரன் உள்ளார். இவர், கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல், கலை மற்றும் மேலாண்மை கல்லூரி, கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளை திறம்பட நடத்தி வருகிறார்.கடலுார்-நெல்லிக்குப்பம் சாலையில் குமாரபுரத்தில் இக்கல்லூரிகள் அமைந்துள்ளன. கல்லுாரிகளின் செயலாளராக விஜயகுமார், முதன்மை நிர்வாக அலுவலராக டாக்டர் கண்ணன், நிர்வாக இயக்குநராக புவனேஸ்வரி ஆனந்த் வழி நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணசாமி நினைவு பாலிடெக்னிக் கல்லூரி 1997ல் துவங்கப்பட்டது. முதல்வராக ரமேஷ்பாபு, துணை முதல்வராக வாசுதேவன், நிர்வாக அலுவலராக சந்திரமவுலி, 75க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளனர். 2021-2024ம் ஆண்டுகளில் பல முன்னணி நிறுவனங்களில் இதுவரை 512 பேருக்கு வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரி 2001ல் தொடங்கப்பட்டது. முதல்வராக இளங்கோ,துணை முதல்வராக ரகு, நிர்வாக அலுவலராக பாலகிருஷ்ணன், 125 பேராசிரியர்கள் உள்ளனர். மாவட்டத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இரண்டாண்டு M.C.A. பட்டப்படிப்பு உள்ள ஒரே பொறியியல் கல்லுாரி இதுவே ஆகும்.இக்கல்லுாரியில், ஐந்து முதல் பத்து மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து ஆண்டுதோறும் சாதிக்கின்றனர். 2021-2024 ம் ஆண்டுகளில், 555 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.600க்கும் மேற்பட்ட கணிணிகளை கொண்ட ஆய்வகங்களில் இக்கல்லுாரி மாணவர்கள் பயன் பெறுவதுடன் அல்லாமல் TCSion உடன் கைகோர்த்து GATE, JEE, NEET, TNPSC, RRB, BANK போன்ற ஆன்லைன் தேர்வுகளையும் நடத்தி மாணவர் சமுதாயம் முன்னேற உதவி வருகிறது.நூலகம் இரண்டு தளங்களில் 50,000க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த புத்தகங்கள், தேசிய மற்றும் பன்னாட்டு பத்திரிகைகள் கொண்டு செயல்படுகிறது.கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல், கலை மற்றும் மேலாண்மை கல்லூரி 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல்வராக நிர்மலா, நிர்வாக அலுவலராக சங்கரநாராயணன் உள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) 2(f) அங்கீகாரம் பெற்றுள்ளது.தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழு (NAAC) அங்கீகாரம் பெற்று, பல்கலை தரவரிசையில் பல மாணவிகள் இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்க்கின்றனர். 2023-24ம் கல்வியாண்டில் 419 மாணவியருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.மூன்று கல்லூரிகளிலும் விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், மாணவ மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பஸ் வசதி 25 வழித்தடங்களில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் முழுவதும் இயக்கப்படுகின்றன. இருபாலருக்கும் கட்டணமில்லா விடுதி வசதி மற்றும் குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான, சுவையான சைவ உணவு வழங்கப்படுகிறது.