உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ் பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, ஆயியார் மடம் தெருவில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் சீனு, 26, என்பதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதும் தெரிந்தது.அவரிடம் இருந்து லாட் டரி சீட்டுகள், 500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சீனுவை கைது செய்தனர். தப்பியோடிய சிறுவரப்பூர் வேல்முருகன் மகன் தமிழழகன் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !