உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி சீட்டு விற்றவர் கைது 

லாட்டரி சீட்டு விற்றவர் கைது 

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் லாட்டரி விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வானொலி திடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மோகன், 64; என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து மோகனை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி