உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவர் கைது

மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவர் கைது

திட்டக்குடி : திட்டக்குடியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர். திட்டக்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, முக்குளத்தியம்மன் கோவில் அருகே ஸ்கூட்டரில் டாஸ்மாக் மதுபாட்டில்களை வைத்து விற்ற ஆலம்பாடி, நடுத்தெருவைச் சேர்ந்த சந்திரசேகர், 41; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ஸ்கூட்டர் மற்றும்7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ