உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனநலம் பாதித்தவர் ஏரியில் சடலமாக மீட்பு

மனநலம் பாதித்தவர் ஏரியில் சடலமாக மீட்பு

பண்ருட்டி: ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட மனநலம் பாதித்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன்,54; மனநலம் பாதித்தவர்; கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நாராயணன் உடல் அருகில் உள்ள ஏரியில் நேற்று மிதந்தது. தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் அவரது உடலை மீட்டு பண்ருட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை