உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

பெண்ணாடம்; பெண்ணாடத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், பொது மக்கள் அச்சமடைகின்றனர். பெண்ணாடம் பேரூராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள, புத்தர் தெரு, கருங்குழி தோப்பு, கிழக்கு வாள்பட்டறை, வள்ளியம்மை நகர், மன்னார் நகர், சோழநகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. கூட்டமாக வரும் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களை திண்றும், அழித்தும் நாசம் செய்கின்றன. மேலும், பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்கள் மற்றும் கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி வருவோரை அச்சுறுத்தி, கையில் எடுத்துச் செல்லும் பொருட்களை பிடுங்கிச் செல்கின்றன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !