மேலும் செய்திகள்
கும்பாபிஷேக ஆண்டு பூர்த்தி விழா
12-Sep-2025
நடுவீரப்பட்டு: பல்லவராயநத்தம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த பல்லவராயநத்தம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 12ம் தேதி காலை கணபதி ேஹாமம், முதல் கால யாக சாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம்,யாத்ராதானம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. 6:40 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து 7:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.
12-Sep-2025