உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய ரேஷன் கடை கட்டும் பணி நெய்வேலி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதிய ரேஷன் கடை கட்டும் பணி நெய்வேலி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

நெய்வேலி:புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டும் பணிகளை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் துவக்கி வைத்தார். நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நடுகாட்டுபாளையம் ஊராட்சியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தலைமை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஓவர்சியர் யுவராணி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜலிங்கம், ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, மாவட்டப் பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் தனபதி, நடுகாட்டுபாளையம் கிளைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், ரவிசங்கர், மணிகண்டன், செல்வராசு, தமிழரசன், ஆனந்தகுமார், ஆர். ஆறுமுகம், உமாபதி, பிரபு, வெங்கடேசன், நாகலட்சுமி, கலைவாணி, சிவமாலா, கங்காசலம், கலைவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ