மேலும் செய்திகள்
கோவில் உண்டியல் திறப்பு
26-Apr-2025
நடுவீரப்பட்டு : பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம் சரக ஆய்வாளர் சீனுவாசன், பண்ருட்டி சரக ஆய்வாளர் ஸ்ரீதேவி, கோவில் செயல் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆலய ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 4 லட்சத்து 67 ஆயிரத்து 874 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
26-Apr-2025