உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோத தகராறு ஒருவர் கைது

முன்விரோத தகராறு ஒருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே முன்விரோத தகராறில், வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த தீவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரைசெல்வன்,45 அதே பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ், 37; இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், இவர்களுக்குள் கடந்த 6ம் தேதி மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த விஜயராஜ், தாமரைசெல்வனை திட்டி, தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, விஜயராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை