உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாம்பு கடித்து ஒருவர் பலி

பாம்பு கடித்து ஒருவர் பலி

பண்ருட்டி; பாம்பு கடித்து தொழிலாளி பலியானது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அடுத்த தனலட்சுமி நகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி,62; சென்ட்ரிங் தொழிலாளி; இவர் கடந்த 9 ம்தேதி வீட்டின் வராண்டாவில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது விஷபாம்பு சக்கபராணியை கடித்தது. உடனடியாக அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சக்கபராணி மகன் முகேஷ்,35; கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ