உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிக்க மானியத்தில் தொகுப்பு

சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிக்க மானியத்தில் தொகுப்பு

கடலுார் : சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஏக்கருக்கு ரூ. 2,400 மானியத்தில் தொகுப்பு செயல் விளக்க திடல் வழங்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்டத்தில் ஆண்டுதோறும் காரிப் மற்றும் ரபி பருவத்தில் சராசரியாக 30,000 ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியங்கள் பயிரிடப்படுவதால், சிறுதானிய சிறப்பு மண்டலம் 1-ஆக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சிறுதானியங்களின் பரப்பு மற்றும் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்குவிக்க ஏக்கருக்கு 2,400 ரூபாய் மானியத்தில் தொகுப்பு செயல் விளக்க திடல் வழங்கப்படுகிறது. இத்தொகுப்பில் சிறுதானிய விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் போன்ற இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் மாற்றுப் பயிர் சாகுபடியின் மூலம், சிறுதானிய பரப்பை அதிகரிக்க 50 சதவீத மானியம் அல்லது 1, 250 ரூபாய் ஏக்கருக்கு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 'உழவர் செயலி' மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ