மேலும் செய்திகள்
திருவாசகம் முற்றோதல்
16-Dec-2024
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில், வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள வராஹி அம்மன் உட்பட சப்த கன்னிகள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் வாழை இலையில் அரிசி, பூசணி உள்ளிட்ட பொருட்கள் வைத்து, விளக்கேற்றி சுமங்கலி பெண்கள் வழிபட்டனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
16-Dec-2024