உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பயணியர் நிழற்குடை திறப்பு விழா :எம்.எல்.ஏ., பங்கேற்பு

பயணியர் நிழற்குடை திறப்பு விழா :எம்.எல்.ஏ., பங்கேற்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பயணியர் நிழற்குடையை நேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.பரங்கிப்பேட்டை அடுத்த கே.பஞ்சங்குப்பம் கிராமத்தில், சிதம்பரம் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதியதாக பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது.பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், ஒன்றிய பாசறை செயலாளர் விஜயராஜா, முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன் முன்னிலை வகித்தனர். பயணியர் நிழற்குடையை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.விழாவில், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, மாவட்ட துணை செயலாளர் செல்வம், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுதாகர், முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகராஜ்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், இளைஞரணி செயலாளர்கள் ஜெய்சங்கர், மகேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவி, பாஸ்கர், மீனவரணி நாகராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.கிளை செயலாளர் சம்பத், நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை