கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார்.பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பெரிய கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித் தார். வரும் 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.