உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பனை விதைகள் நடும் பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

பனை விதைகள் நடும் பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

கடலுார் : முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலுார் அடுத்த சிங்கிரிகுடி ஏரிக்கரை பகுதியில் பனை விதை நடும் விழா நடந்தது.அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, பார்த்திபன் முன்னிலை வகித்தனர். விழாவில், ஊராட்சி் தலைவர்கள் ராமச்சந்திரன், பிரகாஷ், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், வார்டு உறுப்பினர்கள் பழனி, அய்யனார், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, மாணவரணி ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை